கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் எப்படா திரைத்துறைக்குள் வருவார் என்று தவியாய்த்தவிக்கும் உள்ளங்களுக்கு, உங்கள் தாகத்தை அரைகுறையாய் அடங்கவைக்கும் ஒரு குட்டிச்செய்தி.

அண்ணன் பன்முகப்பாண்டியனுக்காக, கோடம்பாக்கத்தின் முக்கால்வாசி ஜனத்தொகைகளிடம் கதை கேட்டும் எதிலும் திருப்தி அடையாத கேப்டன், சில தினங்களுக்கு முன் ‘பிருந்தாவனம்’ என்ற தெலுங்குப்படத்தின் ரீ மேக் உரிமையை ரகஸியமாக வாங்கி வைத்துள்ளார்.

2010 ல் ஆந்திராவில் வெளியாகி,ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில்,அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், சமந்தாவும் கிளாமரில் புகுந்து விளையாடியிருந்த, சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய அந்தப்படம், தனது வாரிசுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்த கேப்டன்,படம் ரீமேக் தானே என்பதால் தானே இயக்கிவிடலாம் என்று முடிவு செய்திருந்தாராம்.

இதைக்கேட்டு கொதித்துப்போன இளைய கேப்டன் நாக்கைத்துருத்தியபடியே,’’ஏற்கனவே நீங்க எடுத்த ‘வறுத்த கறியை’ சாப்பிட்டு அஜீரணத்துல ஆஸ்பத்திரியில அட்மிட் ஆன ஒரு ஆயிரம்பேர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகாம இருக்காங்க.ஏற்கனவே நான் நடிச்சா யாரு பாப்பாங்கன்னு டவுட்டுல,வவுத்துல நெருப்பைக்கட்டிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்கேன். அதுல உங்க டைரக்‌ஷனும் சேர்ந்தா, படம் ரிலீஸாகுற சமயத்துல நம்ம ரெண்டுபேரு மேலயும் ஏகப்பட்ட கொலை, தற்கொலைப்பழிகள் விழ வாய்ப்பிருக்கு. அதனால ‘கட்டிங்’கைப்போட்டமா கவுந்து படுத்தமான்னு கம்முன்னு கிடங்க’ என்று கேப்டனை பதில் பேசவிடாமல் கேப் டவுன் ஆக்கிவிட்டாராம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.