vishal

’வழக்கு எண்’ படத்தின் பரபரப்பான வெற்றிக்கு அப்புறம், ‘எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு’ என்ற நிலையில் இருந்த லிங்குசாமிக்கு, விஷால் ஒரு சிறு வெடியை கொளுத்திப்போட்டிருக்கிறார்.

தனது,’சமர்’ படத்தில் டூயட் பாடுவதற்காக த்ரிஷா மற்றும் சுனைனாவுடன் பாங்காக் கிளம்பிக்கொண்டிருந்த, விஷாலிடம்,’’அடுத்து சுந்தர்.சி. படத்தை முடிச்சிட்டு லிங்குசாமி தயாரிக்கிற படத்துல நடிக்கிறீங்களா அல்லது ஒரே நேரத்துல ரெண்டு படமுமா?’ என்று கேட்டவுடன் சற்றே ஜெர்க் ஆகி,’’ பாஸ் அந்த ‘எங்கேயும் எப்போதும்’ டைரக்டர் சரவணன் பட்த்தை கேக்குறீங்களா ? அது ஆர்யா கேட்டு ரிஜக்ட் பண்ணுன கதை பாஸ். பொதுவாவே மத்தவங்க ரிஜக்ட் பண்ணுன கதையில நான் நடிக்கிறது இல்ல.அதுலயும் ஆர்யா என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவன் வேண்டாம்னு சொன்ன கதையில போயி நான் நடிப்பேனா? சும்மா லிங்குசாமி சார் சொன்னாரேங்குறதுக்காக சரவணன் கிட்ட கதை கேட்டேன் அவ்வளவுதான்.

ஒருவேளை வேறொரு கதை சொல்லி அது எனக்கு புடிச்சிருந்த்துன்னா அதுல நடிக்கலாம். ஆனா என்னால எப்ப கால்ஷீட் கொடுக்க முடியும்னு இப்போதைக்கு சொல்லமுடியாது.’’ என்கிறார் விஷால்.

கதை கேட்க வரும்போது இந்த ’ரிஜெக்ட், எஜெக்ட்’ மேட்டரு எதையுமே சொல்லாமல் விஷால் இப்படி திடீரென்று பல்டி அடித்திருப்பது லிங்குசாமி கோஷ்டியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லிங்குசாமியை நம்பி இப்படியே காத்திருந்தால் சரவணனிடம் ‘உங்க படம் எங்கே எப்போ வந்தது என்று ஜனங்கள் கேட்கும் நிலைக்கு ஆளாகிவிடுவோமோ என்று லேசாக பீதியடைய ஆரம்பித்திருக்கிறாராம் சரவணன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.