meera-jasmin-reentry-1

கொஞ்சகாலம் தலைமறைவாக இருந்து, இப்போது மரைகழண்ட தலையோடு வந்திருப்பார்போல் தெரிகிறது நடிகை மீரா ஜாஸ்மின்.

மலையாள, தெலுங்கு, தமிழ் இண்டஸ்ட்ரிக்கள் மொத்தமும் அவரை மறந்துபோன நிலையில், மீண்டும் படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் மீரா, தனது திருமணச்செய்தி, நடிப்பு வாய்ப்புக்கு எதிராக

இருக்கும் என்ற எண்ணத்தில்,’ சத்தியமா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைப்பா’’ என்கிறார்.

’இப்பிடி எவ்வளவோ பாத்துட்டோம். இதுக்கு மட்டும் ஏன் அதிர்ச்சி அடையணும் பாஸ்’ என்று ஒட்டுமொத்த மீடியாவும் மவுனம் காக்க தொடர்கிறார் மீரா,

‘’கொஞ்ச காலம் முந்தி, மாண்டலின் ராஜேஷுக்கும் எனக்கும் நடுவுல கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சின்னு நீங்க எல்லாருமே எழுதினப்போ நான் ஏன் அமைதியா இருந்தேன்னு எனக்கே விளங்கலை. இப்பவும் சொல்றேன். நான்meera-jasmin-reentry-1 எப்பவுமே திருட்டுக்கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஊர் உலகறிய தான் என் கல்யாணம் நடக்கும். ஆனா மாப்பிள்ளை யார்னுமட்டும் தயவு செஞ்சி கேக்காதீங்க’’?

இது ஒன்றும் தெரியாத அப்பாவிபோல் மீரா ஜாஸ்மின் விடுக்கும் ஸ்டேட்மெண்ட்.

சரி மீரா. நீங்க இவ்வளவு அழுத்தம் திருத்தமா சொல்றதுனால உங்களுக்கு கல்யாணம், அவ்வளவு ஏன் ஃபர்ஸ்ட் நைட் கூட நடக்கலைன்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனா இந்த கேப்புல அட்லீஸ்ட் மாண்டலின் வாசிக்கவாவது கத்துக்கிட்டீங்களா இல்லையா?

meera-jasmin-reentry-1 meera-jasmin-reentry-1

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.