‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படப்பிடிப்பில் நடிகை ஓவியாவுக்கும், படத்தின் இன்னொரு நாயகி தீபா ஷாவுக்குமிடையே நடந்த குடுமிப்பிடி சண்டைதான், சினிமாக்காரர்களின் தற்போதைய நொறுக்குத்தீனி.

தயாரிப்பாளர் தரப்பு இரு நடிகைகளுக்கும் சேர்ந்து ஒரே கேரவன் தந்திருந்த நிலையில், ஓவியா கேரவனுக்குள் ஒரு சானலுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்க,தீபா அதே கேரவனுக்குள் அமர்ந்துகொண்டு செல்போனில் யாருடனோ லொடலொடவென்று பேசிக்கொண்டிருந்தாராம். வெளியே போய் பேசும்படி ஓவியா எவ்வளவோ முறை சொல்லியும் தீபா கேட்காத நிலையில், தனது மேனேஜர் அருணை வரவைத்து, அந்த பொண்ணை கையப்பிடிச்சி இழுத்து வெளிய அனுப்பு’ என்று சொல்ல, வேகமாய் கேரவனை விட்டு வெளியேறி, ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஹோட்டலுக்கு கிளம்பிவிட்டார் தீபா.

இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பு தீபாவை சமாதானப்படுத்த,ஒரு அரை நாள் படப்பிடிப்பை காலிசெய்து விட்டு வந்து சேர்ந்த தீபா,’ இனி ஓவியாவுடன் சேர்ந்து கேரவன் தருவதாக இருந்தால், அதற்குப்பதில் மொட்டை வெயிலில் கூட அமரத்தயார்’ என்று அறிவித்துவிட்டு, ஓவியாவின் கேரவன் இருந்த இடத்திலிருந்து தனது ஜாகையை ஒரு ஃபர்லாங் தள்ளி அமைத்துக்கொண்டாராம்.

‘’நான் ‘யுத்தம் செய்’ பட்த்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே ஓவியாவின் மேனேஜர் அருண் தன்னை எனக்கு மேனேஜராக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.அவரது திருட்டு முழி எனக்குப்பிடிக்காததால், நான் அவரை மேனேஜராக்க விரும்பவில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டுதான் ஓவியாவை எனக்கு எதிராக தூண்டிவிடுகிறார். இனியும் ஒரு முறை அவர் என் வழியில் வந்தால், நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்யவும் தயங்கமாட்டேன்’ என்று ஓவியாவின் மேனேஜர் அருண் குறித்து ‘வள்ளுன்னு’ ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார் தீபா ஷா.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.