விஷால்-சுந்தர்.சி கூட்டணியின் ‘மத கஜ ராஜா’ [எம்ஜிஆர்] படம் ஷூட்டிங் கிளம்புவதற்குள்ளாகவே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். முக்கியமாக ஹீரோயின்களை வைத்து விஷாலும், சுந்தரும் ஒரு மியூசிக்கல் சேரே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஹன்ஷிகா, அடுத்ததாய் கார்த்திகா விலகிக்கொள்ள, லேட்டஸ்ட் வெளியேற்றம் தப்ஸிப்பொன்னு.

இதில் தப்ஸியின் வெளியேற்றம், தனது விருப்ப நாயகி, வரலட்சுமியை வரவு வைப்பதற்காக விஷாலே திட்டமிட்டு வியூகம் வகுத்தது என்று ஒரு ஸ்ட்ராங் ரூமர் நடமாடுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வரலட்சுமியிடம் தீராத காதல் விளையாட்டுப்பிள்ளையாக மாறியிருக்கும் விஷால், படம் பற்றிய ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே இரண்டில் ஒரு நாயகி ரோலுக்கு வரலட்சுமிட்யை சிபாரிசு செய்தாராம்.

‘’அப்ப அஞ்சலி என்னோட சாய்ஸ். வரலட்சுமி உங்க சாய்ஸ். ரெண்டு ஹீரோயினுமே ஓ.கே’ என்று சுந்தர்.சி தலையாட்ட விசயம் விஷாலின் பெற்றோருக்குத்தெரிந்து, சுந்தர்.சி யை வரவழைத்து, ’’படம் மட்டும் எடுங்க, ஓ.கே?’’ என எச்சரித்து, வரலட்சுமியை நீக்கும்படி உத்தரவிட்டார்களாம்.

அவ்வாறு வரலட்சுமி வெளியேற்றப்பட்ட பின்னர்தான் மேற்படி மியூ’சிக்கல்’ சமாச்சாரங்கள் நடந்தன.

தற்போது மறுபடியும் வரலட்சுமி வந்திருப்பது தெரிந்ததும்,’’ என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ? நான் வரலடா சாமி உங்க ஆட்டத்துக்கு’’ என்று ஒதுங்கிக்கொண்டாராம் விஷாலின் அப்பா.

ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா… நமக்கே கண்ணைக்கட்டுதே இவிங்க ஆடுற அழுகுணி ஆட்டத்தப்பாத்தா…

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.