amalapaul marriage

என்னதான் அவர் டி.வி.டி.யை சுட்டு படம் எடுக்கிற டைரக்டர் என்றாலும், அவரை இந்தப்பாடு படுத்துவது பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சமும் அழகல்ல. முதலில் காதலிக்க வைத்தார்கள். பின்னர் ரகஸிய கல்யாணம் பண்ணிவைத்தார்கள். இப்போது லேட்டஸ்டாக, உறவு முறிந்துவிட்டது. சகலமும் ஹோ கயா என்கிறார்கள்.

சங்கதி யாரைப்பற்றியது என்று இந்நேரம் யூகித்திருப்பீர்களேயானால், நீங்கள் ரெகுலராக தமிழ்சினிமா கிசுகிசுக்கள் படிப்பவர்கள் என்று அர்த்தம்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லண்டனில், விக்ரமை வைத்து விஜய் இயக்கும் ‘தாண்டவம்’ படப்பிடிப்பு நடந்து வருவது சகலரும் அறிந்ததே. படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில நாட்களிலேயே,அங்கு சென்று தனது காதலர் இயக்குனர் விஜயுடன் அமலாபால் தங்கி ‘இருந்துவிட்டு’ வந்த கதை பழைய கதை.

அப்படி இருந்த சமயத்தில் அமலா நடிகர் விக்ரம் மீதும் அன்பு செலுத்தியதைத் தொடர்ந்து, விஜய் பயங்கர அப்செட் ஆனதாகவும், ‘இனி என் முகத்திலேயே முழிக்காதே’ என்று விரட்டி அடித்ததாகவும் சோகமான வதந்தி ஒன்று நடமாடியது.

அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த வாரம், தனது வேறொரு சொந்தவேலையாக லண்டன் சென்ற அமலாபால், தாண்டவம்’ படப்பிடிப்பு நடந்த ஏரியாப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இத்தனைக்கும் லண்டனில் பெய்துவரும் தொடர் மழையால், படப்பிடிப்பு நின்று விஜய்,விக்ரம் அனைவருமே வெட்டியாய் தான் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

இதை ஒட்டி வெட்டி, விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையில் ‘மனமுறிவு’ ஏற்பட்டுவிட்டது. விஜயின் வீட்டில் அவருக்கு அவசர அவசரமாக பெண் பார்க்கிறார்கள் என்று மாய்ந்து மாய்ந்து பத்திரிகைகள் எழுதவே, டென்சனான விஜய்’ ’’ஏங்க எங்களுக்கு கல்யாணமே ஆகலை.அப்புறம் ஏங்க டைவர்ஸெல்லாம் பண்ணி வைக்கிறீங்க?’’ என்று ஒவ்வொரு நிருபராக, குறிப்பாக பெண் நிருபர்களுக்கு, போன் போட்டு புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம்.
marriage

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.