seeman

கடந்த பல மாதங்களாகவே, சினிமாவில், சீமானை ‘கண்டுபிடி கண்டுபிடிடா’ என்றுதான் தேடவேண்டியிருக்கிறது.

இந்நிலையில் ‘பகலவன்’ பட முன் தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும்,, விரைவிலேயே ஜீவா-ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் சீமான்.

‘’விஜய் நடிக்க மறுத்த ‘பகலவன்’ கதை, அவரையும் விட ஜீவாவுக்கு பொருத்தமாக இருக்கும். அவருக்கு ஜோடியாக இந்தக்கதைக்கு கமலின் மகள் ஸ்ருதி நன்றாக இருப்பார். இருவரின் தேதிகளையும் வாங்கி விரைவிலேயே படப்பிடிப்பு கிளம்ப எனது தயாரிப்பாளர் தாணுவிடம் பேசச்சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார் சீமான்.

ஆனால் உண்மை நிலைமையோ சீமான் சொல்லுவதற்கு நேர்மாறாக இருக்கிறது.

மிஷ்கினுடன் ’முகமுடி’ கவுதமுடன் ‘நீதானே என் பொன் வசந்தம்’ வாமனன்’ இயக்குனர் அகமது படம், எஸ்.பி,ஜனநாதனின் படம் என்று குறைந்தது இன்னும் ஒரு வருடத்துக்காவது புதுப்படங்களில் நடிக்க முடியாத நிலையிலிருக்கும் ஜீவா, ‘’ நான் இன்னும் ‘பகலவன்’ கதையைக்கூட கேட்கவில்லை’’ என்கிறார்.

இனி இப்போதைக்கு படங்களில்,அதுவும் தமிழ்ப்படங்களில் நடிப்பதைல்லை என்று முடிவெடுத்திருக்கும் ஸ்ருதியோ, பகலவன்’ படத்துல நடிக்கிறீங்களாமே?’ என்று கேட்டால்,’’ ’’அப்படி ஒரு படம் சம்பந்தமா இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசுனதில்லை’’ என்கிறார்.

விஜயை நம்பி ஏமாந்த மாதிரி, வெட்டியா ஜீவாவையும் நம்பி உட்காராம, நம்ம ‘நாம் தமிழர்’ கட்சித்தம்பிங்க யாரையாவது நாயகனாக்கி படத்தை ஆரம்பிங்க சீமான்.

seemanjeevasruthi

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.