sreekanth

ஷங்கரின் ‘நண்பன்’ தன்னை தமிழ்சினிமாவின் கொம்பன் ஆக்கிவிடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், அது பழையபடி தன்னை ஒரு சும்பனாகவே விட்டுவிட்டுப்போனதில் ஏகப்பட்ட வருத்தம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு.

தற்போது கைவசம் ‘பாகன்’ ,’எதிரி எண் 3’ ஆகிய இரு படங்களே உள்ள நிலையில்,

‘’சம்பளம் எவ்வளவு கம்மியா குடுத்தாலும் பரவாயில்ல. ’வாலு’ மாதிரி நல்லதா ஒரு நாலு படம் புடிச்சிக்குடுங்க’ என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் ஒருவித பதட்டத்துடன் கெஞ்சுகிறாராம்.

‘பாகன்’ படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், இப்போது பூனம் பாஜ்வாவுடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீகாந்த், தினந்தோறும் நள்ளிரவுகளில் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘எதிரி எண் 3’. புதுமுக இயக்குனர் ராம்குமாரின் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் ஐ.டி. புரபஷனலாக நடிக்கும் இந்தப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் என்பதால், மொத்தக்கதையும் நடுநிசியிலேயே நடக்கிறதாம்.

‘’ இரவு பத்துமணிக்கு துவங்கும் படப்பிடிப்பு பெரும்பாலும் விடியிறப்பதான் முடியும். அதனால கொஞ்சநாளாவே நான் ஒரு இரவுப்பறவையாவே மாறிட்டேன். இந்தப்படத்துல க்ளைமாக்ஸை ஒட்டி வர்ற ஒரு குங்-ஃபூ ஃபைட்டுக்காக சீரியஸாவே அதைக் கத்துக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்’’ என்கிறார் நடுநிசி நாயகன்.

நம்ம கைநீட்டி சம்பளம் வாங்குன படத்தோட புரோமோ’வுக்காக கொஞ்சம் ரீல் வுடலாம்தான். ஆனா அதுக்காக குங்-ஃபூ பேரைச்சொல்லியெல்லாம் காதுல ஃபூ சுத்தக்கூடாது ஸ்ரீ.

sreekanth2 sreekanth3

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.