கொஞ்ச நாள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இசைப்பணியில் ஈடுபடலாமென்று மும்பை பாந்திரா பக்கம் ஒதுங்கிய ஸ்ருதிஹாஸனை ஆந்திராவாலாக்கள் சும்மா விடுவதாயில்லை.

‘கப்பார் சிங்’ படம் பாத்ததுக்கு அப்புறமா, ‘ஸ்ருதி காவாலி, ஸ்ருதி காவாலின்னு ஆந்திரா முழுக்க அலையடிக்குதும்மா’ என்ற படி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களுமாக தொடர்ந்து அன்புத்தொல்லை கொடுக்க, இப்போது கொஞ்சம் இறங்கி வந்து ஒரே ஒரு படத்துக்கு மட்டும் ஓ.கே. சொல்லியிருக்கிறாராம் ஸ்ருதி.

‘டான் சீனு’ வெற்றிப்படம் கொடுத்த கோபிசந்த் மல்லிநேனு இயக்க,’ பலுபு’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அநேகமாக ரவிதேஜாவாகவே இருக்கக்கூடும்.

ஸ்ருதி, கோபிசந்த் காம்பினேஷன் என்பது முடிவாகிவிட்டாலே எந்த ஹீரோவிடம் வேண்டுமானாலும் கால்ஷீட் வாங்கிவிடலாம் என்பது தயாரிப்பாளரின் கணக்கு.

இப்படி ஒரு கச்சிதமான கணக்கு போட்டு வைத்திருக்கும் தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஸ்ருதியின் தந்தை கமலிடம் முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தயாரிப்பாளராக களம் இறங்கி, இப்போது பணத்தை திரும்ப கேட்டு காத்திருக்கும் பி.வி.பி. பிக்சர்ஷின் பொட்லூரி.வி. பிரசாத்.

ஒருவேளை கமலிடமிருந்து ரிடர்ன் வாங்கும் பணத்தில்தான் ஸ்ருதிக்கு அட்வான்ஸே தரப்போகிறாரோ பிரசாத்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.