’காதலிங்கறவ சிக்ஸ்பேக் மாதிரி அவள டெய்லி மெயிண்டைய்ன் பண்ணிக்கிட்டே இருக்கனும். ஆனா நண்பன்ங்கிறவன் ஒரு தொப்பை மாதிரி அதை மெயிண்டைன் பண்ணவேண்டியதும் இல்லை. ஒரு தடவை வந்துட்டா அது நம்மள விட்டுப்போறதும் இல்லை’

இது யாரோட டயலாக்காக இருக்கும் என்று யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. சாட்சாத் அம்பி சந்தானத்தோடதேதான். இன்றைக்கு காதல், நட்பு, குவார்ட்டர். ஃபிகர் என்ற நாலே சமாச்சாரங்களை நையாண்டி செய்து கோடிகளில் சம்பளம் குவித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

இன்றைய தேதியில், ஷங்கர் படம் உட்பட தயாரிப்பில் இருக்கும் அத்தனை பெரிய ஹீரோக்களின் படங்களிலும் சந்தானம் இருக்கிறார்.

அவ்வளவு ஏன், இன்றைக்கு தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் கார்த்தி தனது பேட்டியில் என்னோட அடுத்த மூனு படத்துலயும் சந்தானம் இருக்கிறார் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளவேண்டிய நிலை.

வடிவேலு நீண்ட ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, விவேக் கிடைக்கிற ஒன்றிரண்டு வாய்ப்புகளில் டக் அவுட் ஆகிக்கொண்டிருக்க, கருணாஸ் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று வேறு யாரோவாகவே ஆகிக்கொண்டிருக்க, சந்தானத்தின் மவுசும் சம்பளமும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கிறது.

மேற்படி டயலாக் இடம் பெறும் சிம்புவின் ‘வாலு’ படத்துக்கு 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் சந்தானத்துக்கு, அந்தப்படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரைக்கோடி ரூபாய்.

இந்தத்தொகையைக்கேட்டு தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி அதிர்ந்த போது, ‘’சிம்பு என்னோட உயிர் நண்பன் சார். அதனால இவ்வளவு கம்மியான சம்பளம் சொல்லியிருக்கேன். மத்த படங்கள்ல சர்வசாதாரணமா ஒரு நாளைக்கு பத்துலருந்து பதினஞ்சி லட்சம் வரைக்கும் வாங்கிக்கிட்டிருக்கேன்’’ என்றாராம்.

’வேணாம் மச்சான் வேணாம் இந்த சந்தானம் காமெடி’ என்று ரசிகர்கள் சொல்லும் வரை முடிஞ்சவரைக்கும் கல்லா கட்டுங்க பாஸ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.