ஞானப்பழத்துக்காக அப்பன் முருகனும், விநாயகரும் கட்டி உருண்டகதையாக நடிகை தப்ஸி பொண்ணுக்காக இரு நடிகர்கள் முட்டிமோதிய கதைதான் கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு பக்கோடா.

‘ஆடுகளம்’ ரிலீஸான சமயத்திலிருந்தே ‘மங்காத்தா’ புகழ் மகத்தை தீவிரமாக காதலித்து, அவருடன் பார்ட்டிகளுக்கு போவதை பார்ட் டைம் டூட்டியாக வைத்திருந்த தப்ஸி, மகத் அடுத்து படங்கள் எதுவுமின்றி சதா பார்ட்டிக்கு அழைத்துக்கொண்டிருக்கவே மெல்ல அவரிடமிருந்து அவுட் போக ஆரம்பித்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மனோஜுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்த டாப்ஸி, அவருடனான தனது உறவை டாப் கியருக்கு மாற்றிக்கொண்டு, ஷூட்டிங் இல்லாத அவ்வளவு நேரங்களையும், அவருடனும், அவர் தங்கை மஞ்சுவுடனும் [ மணிரதனம் பட்த்தில் முக்கிய வேட்த்தில் நடிக்கிறாரே அவரேதான்] கழிக்க ஆரம்பித்தார்.

இந்த ஜோடியின் கூட்டணியை ஆந்திராவாலாக்கள் கொளுத்திப்போட ஆரம்பிக்க, மனோஜின் மொத்தக்குடும்பமும், ‘ச்ச்சும்மா நட்புதான்.அதுக்குமேல ஒண்ணுமில்லை’ என்றாலும் அதை யாரும் நம்பத்தயாரில்லை.

காதல் தோல்வியில் நொந்துபோயிருந்த மகத்தின் காதுகளுக்கு மேற்படி செய்தி வரும்போதெல்லாம் நறநறவென்று பற்களைக் கடித்தபடி, ’மனோஜ் நீயும் நானுமா?’’ என்று ஆவேசமாக பாடியபடி, பார்ட்டிகளில் பல பாட்டில்களை உடைத்துக்கொண்டிருந்தார்.

கடைசியில், கடந்த சனியன்று நடந்த ஒரு பார்ட்டியில் மகத் கோஷ்டியினரும், மனோஜ் கோஷ்டியினரும் கலந்துகொண்டனர். பல ரவுண்டுகள் சரக்கு உள்ளே போனவுடன்.’’ மச்சி நான் கடிச்சி கீழ போட்ட பழத்தை இன்னொரு அணில் கடிச்சி தின்னுக்கிட்டிருக்குடா’ என்று கமெண்ட் அடிக்கவே மனோஜ் கோஷ்டியினர் உடனடியாக மகத்துக்கு மகத்துவமான கவனிப்புகளை வழங்க, அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.