abcd

போலீஸ் ஷ்டேசனை விட்டு நகட்டப்பட்டுள்ளதே ஒழிய, டாப்ஸி- மகத்- மனோஜ் பஞ்சாயத்து இன்னும் எந்த முடிவுக்கும் வந்தபாடில்லை.

‘’அவதான் மனோஜை அண்ணன்னு தான சொல்றா அப்ப என்னை லவ் பண்ணச் சொல்லு.’’ இது மகத்.

‘’அடுத்த வாட்டி இதே எண்ணத்தோட டாப்ஸிய அப்ரோச் பண்ணுனே மவனே இண்டஸ்ட்ரியிலயே இருக்கமாட்டே’’ இது மனோஜ்.

ஏற்கனவே சண்டையை விலக்கிவிட்ட மீடியேட்டர்கள் மூலமே இந்த சனிப்போர் தொடர்ந்துகொண்டிருக்க, இப்போது ‘அந்த சண்டையை நான் தீர்த்துவைக்கிறேன். மகத், மனோஜ் இருவருமே என் நண்பர்கள்தான். ஆனால் இன்னும் என்னிடம் சரிவர நெருங்கிவராத டாப்ஸியை மட்டும் கொஞ்ச நாளைக்கு என்னிடம் நெருங்கிப்பழகச்சொல்லுங்கள்’’ என்றிருக்கிறாராம் சம்மன் இன்றி இந்த பஞ்சாயத்தில் ஆஜராக விரும்பும் உத்தம ராசா சிலம்பரசன்.

ஆனால் குரங்கு ஆப்பத்தை பங்கு போட்டுக்கொடுத்த கதை திடீரென நினைவுக்கு வரவே,’வேண்டாம் பிரதர். எங்க பிரச்சினையை நாங்க பாத்துக்கிறோம். நீங்க வாலை மூடிக்கிட்டு உங்க ‘வாலு’ படத்துல கவனம் செலுத்துங்க ‘என்றதாம் மனோஜ் தரப்பு.

ஆனால் மகத்தோ எனக்கு கிடைக்காதது, அட்லீஸ்ட் சிம்புவுக்காவது கிடைக்கட்டும் என்ற பேரெண்ணத்தில் ‘நாட்டாமை நீங்களே அந்த பொண்ண கஸ்ட்டியில எடுத்து உங்க இஷ்டப்படி ஒரு தீர்ப்பை சொல்லுங்க’ என்கிறாராம்.

கிரவுண்ட்ல பாலை எடுத்து விளையாடுற மாதிரி ஒரு கேர்ளை எடுத்து விளையாடமுன்னு நினைக்கிறாய்ங்களே…. இது அந்த ஆடுகளத்துக்கு தெரியுமா?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.