முளைத்து மூனு படம் நடிப்பதற்குள், தயாரிப்பாளர், இயக்குனர்களிடமும், மீடியா ஆட்களிடமும் ஓவர் ஆட்டம் காட்டியதால், அவரது சொந்த ஊரான கேரளாவுக்கே விரட்டி அடிக்கப்பட்ட அமலா பால், இப்போது ‘நான் ஈ’ போல் மறுபிறவி எடுத்து மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வர ஆசைப்படுகிறாராம்.

தற்போது கைவசம் சமுத்திரக்கனி, ஜெயம் ரவி கூட்டணியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக, ஒரே ஒரு படத்தை மட்டும் கைவசம் வைத்திருக்கும் அமலாபால், தமிழில் தனது மார்க்கெட் திடீரென டல்லடிக்க காரணம் என்ன என்று மலையாள மாந்த்ரீகர்கள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினாராம்.

அதில், பலரும் பலவிதமாக சொல்லிக்கொண்டிருக்க, பிழைப்பியல் தெரிந்த ஒரே ஒரு மாந்த்ரீகர் மட்டும் ‘ மோளே நிண்ட தேகத்தில் வல்லிய ஒரு குறை உண்டு. நாடு கடஞ்னு போயி ஆபரேஷன் செய்திங்கில் நிண்ட மார்க்கெட் மூனு லாங்வேஜ்ல மீண்டும் சூடு பிடிக்க சான்ஸ் உண்டு’ என்றாராம்.

இதை ஒட்டி, இல்லாதை இருப்பதுபோல் காட்டி எவ்வளவு காலத்துக்குத்தான் ஜனங்களை ஏமாற்ற முடியும் என்று யோசித்த அமலா உடனே, சில ஸ்பான்சர்களின் உதவியுடன் அமெரிக்கா பறந்தாராம். அங்கு கைதேர்ந்த சில டாக்டர்களிடம் ஆபரேஷன் செய்துகொண்டு, 15 நாட்கள் ஓய்வுக்குப்பின், கொப்பும் கொலையும், மப்பும் மந்தாரமுமாக கொச்சின் திரும்பியிருக்கிறாராம்.

இதன் நெக்ஸ்ட் ஸ்டெப்பாக, சென்னையைச்சேர்ந்த சில முன்னணி பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்து, தனது பழைய தெனாவட்டான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுவரும் அமலா, ‘ என்னை எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாக்குங்கள். உங்களை எப்படி வேண்டுமானாலும் கவனிக்கிறேன்’’ என்று ஐஸ் வைக்கிறாராம்.

இதன் விளைவாகத்தான் கடந்த சில தினங்களாக ‘காதலில் சொதப்புவது எப்படி?’ ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ வேட்டை’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த அமலாபால்’ ,… என்று தொடங்கும் சில செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

பி.கு; முகப்பில் இடம் பெற்றுள்ள அமலா பால் ஸ்டில்லை பால் குடிக்கும் வயதிலுள்ள குழந்தைகள் பார்த்து பயந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.