தமிழ்சினிமாவில் ‘குனிவதற்கென்றே’ பெரும்தொகையை பொட்டலமாகக் கட்டிக்கொண்டு வந்து, முதலில் கமலிடம் ‘விஸ்வரூபத்துக்காக 40க்கும் மேற்பட்ட கோடிகளை பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் பொட்லூரி. வி. பிரசாத்தை, அடுத்து ‘பரதேசி’யாக்கும் முயற்சியில் க்ளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறார் பாலா.
முதல் இரண்டு ஷெட்யூல்களை மூடிமறைத்து, தொண்ணூறு நாட்களில் முடிக்கப்பட்டதாக, முன்னூறு பொய்கள் அவிழ்த்துவிடப்படும் ‘பரதேசியின் ஆரம்ப கட்ட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது பொட்லூரியின் பி.வி.பி.நிறுவனம்.
படம் துவங்கியதற்கு முன்பே பெரும் தொகையை அட்வான்சாக வாங்கிக்கொண்ட பாலாவுக்கு, கடைசி ஷெட்யூல் நடந்த போது, கேட்டபோதெல்லாம் பணப்பட்டுவாடா செய்ய தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது.
இதற்காகவே காத்திருந்ததுபோல், விஸ்வரூபம் கமல் பாணியிலேயே, ‘உனக்கு படம் முடிஞ்ச உடனே, என்னோட அருமை தெரிஞ்ச நல்ல புரடியூசர்கிட்ட பிசினஸ் பண்ணிட்டு பணத்தை செட்டில் பண்ணிடுறேன்’ என்று பேசி, ‘பரதேசி’ ஆகும் பாக்கியம் உனக்கு இல்லை’ என்று பி.வி.பி.யை கழட்டிவிட்டுவிட்டாராம் பாலா.
இப்போதைய ஆரம்பகட்ட ‘பரதேசி’ டிசைன்கள் தயாரிப்பாளர் பெயர் இல்லாமல், வெறுமனே பாலாவின் பெயருடன் மட்டுமே காணப்படுகின்றன.
பாலா இப்படி தன்னை கழட்டிவிட்டதால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர் பிரசாத்.