பார்க்க, பட்சணம் போல், லட்சணமாக இருந்தாலும், தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ராசி இல்லாத நடிகைதான் ரம்யா நம்பீசன்.

‘நான் இப்ப கடைசியா நடிச்சி முடிச்ச ‘பிட்சா’ மட்டும் ரிலீஸாகட்டும், அந்த மூடநம்பிக்கை தகர்ந்து என் பின்னாடி, தமிழ்ப்பட டைரக்டர்களும், புரடியூசர்களும் கியூவுல வந்து நிக்கிறாங்களா இல்லையான்னு பாருங்க’ என்று சவால் விடுகிறார் ரம்யா.

‘காதலில் சொதப்புவது எப்படி? க்கு அடுத்த படியாக, குறும்படம் இயக்கி, பெற்ற பேரின் மூலம், பெரும்படம் இயக்க வாய்ப்புப்பெற்ற கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் தயாராகி இருக்கும், ‘பிட்சா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

’தென்மேற்கு பருவக்காற்று’ மற்றும் ‘பிட்சா’ பட ஹீரோ விஜய்சேதுபதி ,ரம்யா நம்பீசன், கானா பாலா,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட்ட படத்தின் அனைத்து டெக்னீஷியன்கள் கலந்துகொண்ட விழாவில் படத்தின் ட்ரெயிலரும் ஒரு பாடலும் ஒளிபரப்பப்பட்டது. பாடலிலும் ட்ரெயிலரிலும் ஒரிஜினல் காதலர்களை மிஞ்சும் அளவுக்கு நெருக்கமாக, அவ்வளவு இறுக்கமாக நடித்திருந்தனர் விஜய் சேதுபதியும், ரம்யாவும்.

‘மலையாளத்துல என்னோட மார்க்கெட் சூப்பரா இருந்தாலும், நான் நடிச்ச ஒண்ணுரெண்டு தமிழ்ப்படங்கள் சரியா ஓடாதது எனக்கு ரொம்ப வருத்தமான விஷயம். அந்த நேரத்துலதான் ‘பிட்சா’ கதையை டைரக்டர் சுப்பாராஜ் சொன்னார். ரொம்ப த்ரில்லிங்கான லவ் ஸ்டோரி. இதுக்கு முந்தி இந்த சாயல்ல ஒரு படம் கண்டிப்பா பாத்திருக்க மாட்டீங்க. படம் ரிலீஸான உடனே தமிழ்சினிமா சுப்பாராஜை தலையில தூக்கி வச்சி கொண்டாடப்போகுது’ என்று அநியாயத்துக்கு டைரக்டர் புராணம் வாசிக்கிறார் ரம்யா.

‘அட்டகத்தி’ தயாரிப்பாளர் குமாரின் இரண்டாவது தயாரிப்பு இது. இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் படத்தை ரிலீஸ் செய்ய உத்தேசித்திருக்கிறாராம்.

படம் ரிலீஸான உடனே, நம்பீசன் சொல்லை நம்பலாமா வேண்டாமான்னு தெரிஞ்சிடப்போகுது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.