விநாயகரை கும்பிடுகிறார்களா அல்லது அவரை வைத்து காமெடி பண்ணுகிறார்களா என்று சந்தேகப்படுமளவுக்கு ஆயிரக்கணக்கான கெட்-அப்களில் அவரை நடமாடவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அவரது பக்தர்களுக்கு ஒரு அலாதி சந்தோஷம்.

கடந்த ஆண்டு, அன்னா ஹசாரேவை அன்னா கணபதியாக மாற்றிய ஆந்திரவாலாக்கள், இந்த ஆண்டு,தெலுங்கு சினிமாவின் ஒரிஜினல் பவர் ஸ்டார் பவண் கல்யாணின் கடைசி பிரம்மாண்ட ஹிட்டான ‘கப்பார் சிங்’ கணபதியை உருவாக்கி சீரியஸ் பக்தர்களை, கண் சிவக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு கண்ணில் வெண்ணை, இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று சொல்வார்களே அது நம்ம பவர்ஸ்டாருக்கு மிகவும் பொருந்தும் போல.

ஆந்திர பவர்ஸ்டார் விநாயகராக அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்க, தமிழ் பவர்ஸ்டார் சீனிவாசன் மட்டும், உன் சதுர்த்தி அன்று கூட கம்பி எண்ணி களி தின்றுகொண்டிருப்பதை, ’விநாயகா நீ இன்னுமா வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.