‘நீங்க நல்லவரா, வல்லவரா?’ என்று ‘நாயகன்’ கமலைப் பார்த்து கேட்ட மாதிரியே ஸ்ருதியையும் பார்த்து கேட்க வேண்டும் போலிருக்கிறது அந்த செய்தியைப் படித்தபோது.

தமிழில் புதுப்படங்களில் நடிக்க கதை கேட்பதில்லை. தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறார். இந்தியில் பிரபுதேவாவுடன் பிஸியாக இருக்கிறார். ஆனாலும் ஏன் என்று தெரியவில்லை, விரைவில் வெளிவர இருக்கும் ராம் சரணின் ‘நாயக்’ தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி.

தெலுங்கில் அயிட்டம் சாங்’கை எப்படி எடுப்பார்கள் என்பதை யாருக்கும் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. சும்மா கடைசியாக வந்த ‘கப்பார் சிங்’கில் கிளாமர் காட்டி, தந்தை கமலை சங்கடப்படுத்திய ஸ்ருதி, இப்போது ஒரு அயிட்டம் பாடலுக்கு ஆட ஒத்துக்கொண்டிருப்பது, பருவம் அடைந்த ஆந்திராவாலாக்கள் பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

’ஒரு முழுப்படத்துல நடிக்கிறதுக்கு தர்ற சம்பளத்தை ஒரே பாட்டுக்கு தர்றதா இருந்தா, யார்தான் மறுப்பாங்க?’

இது, ஸ்ருதி ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டதற்கான கேள்வியா , பதிலா? வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.