கடவுளையே கோர்ட்டுக்கு இழுக்கும் விவகாரமான கதை, தமிழ் ரீ மேக்கில் ரஜினி நடிக்கப்போகிறார், இந்தியின் ஹாட் டைரக்டர் பிரபுதேவாவும்,அவரது ஹார்ட் பேபி சோனாக்‌ஷி ஷின்ஹாவும் ஒரு கும்மாங்குத்து பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள் என்பது உட்பட் ஏகப்பட்ட சமாச்சாரங்களுக்காக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திப்படம் ‘ஓ மை காட்’.

அக்‌ஷர் குமார் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தின் ஹீரோ பரேஷ் ராவல். தனது தொழிலில் ஏற்பட்ட கஷ்டத்தை தீர்ப்பதற்காக, கொலவெறியுடன் கடவுளைத்தேட ஆரம்பிக்கும் பரேஷ் ராவல், அவர் கையில் மாட்டாததால், ஒரு கட்டத்தில் அவர் பெயரைச்சொல்லிக்கொண்டு அலையும் சாமியார்களையும் போலிச்சாமியார்களையும் தேடிப்போய் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார். ராவலின் அழிச்சாட்டியங்கள் அளவுமீறிப்போகவே, கடைசியில் கடவுள் நேரில் ஆஜராகி பேஜார் செய்கிறார்.

இப்படிப்போகும் கதையின் நடுவில், போலிச்சாமியார்கள் ஏரியாவில், நித்தியானந்தாவின் கேரக்டரை அப்படியே சித்தரித்து, அவர் கூடவே ரஞ்சிதா கேரக்டரையும் புகுத்தி இருப்பதாகவும், வரும் 28 ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால், நித்தியானந்தா வெறுமனே விரலைச் சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், ‘ஓ மை ரஞ்சிதா’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் நித்தியானந்தா வேடத்தில் தில்லாலங்கடி வேலைகள் செய்திருப்பவர் மிதுன் சக்ரவர்த்தியானந்தா.

சரிங்க, சரியா கேப்புல ஆப்பு வச்சீங்க. அந்தப் படத்தோட தமிழ் ரைட்ஸையாவது, ரஞ்சிதா கோஷ்டிகளுக்கு தரக்கூடாதா?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.