மணியின் ‘கடல்’ பட நாயகியும், பழைய நடிகை ராதாவின் மகளும், புதிய நடிகை கார்த்திகாவின் தங்கையுமாகிய, பதினான்கு வயதான கார்த்திகா, இன்னும் அவரது ஒரு ஸ்டில் கூட வெளிவராத நிலையில், ஜீவா ஹீரோவாக நடிக்கும் ரவி.கே.சந்திரனின் ‘யான்’ படத்துக்கும் ஹீரோயின் ஆகிவிட்டார்.

இதில் சுவாரசியமான விசயமே உங்களையும் என்னையும் போலவே, ரவி.கே. சந்திரனும் தனது பட நாயகியான துளசியை நேரிலோ,போட்டோவிலோ கூட பார்த்ததில்லையாம்.

காரணம் மணிரத்தனாரின் கண்டிப்பு.

‘’என் படத்துக்கு பிரஸை அழைத்து துளசியை அறிமுகப்படுத்தும் வரை, துளசியை யாரும் பார்க்க அனுமதியில்லை. நீ என் ஒளிப்பதிவாள நண்பன் என்பதால் சொல்லுகிறேன். பொண்ணு பிரமாதமா வருவா. தைரியமா கமிட் பண்ணு’’ என்றாராம் மணி.

‘’14 வயசுதான் ஆகுதுங்குறாங்க. உங்க ‘கடல்’ ஹீரோவும் சின்னப்பையன்ங்கிறதால உங்களுக்கு பிரச்சினையில்லை. ஜீவாவுக்கு பொருந்தனுமே?- இது ரவி.கே.வின் கேள்வி.

இதற்கு மணிரத்னம் சொன்ன பதிலை மட்டும் தயவுசெய்து, ‘வின்னர்’ படத்தில் பேக்கரி கடைக்காரனுக்கு அக்காவை விட்டுக்கொடுத்த கதையை வடிவேலு அர்ஜுனுக்கு சொன்ன குரலில் படிக்கவும்.

‘’ வயசு கம்மிதான். ஆனால் ஃபிகர் ரொம்ப பெருசு’

‘யான்’ பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்த மணியின் இந்த சிபாரிசு போதாதா ‘யான்’ ரவி.கே.சந்திரனுக்கு?’

பி.குறிப்பு: அவளை நினைச்சி இவளை இடிச்சமாதிரி துளசி ஸ்டில் கிடக்கிறவரைக்கும் கார்த்திக்காவைப் பாத்துக்கவேண்டியதுதான்.

கார்த்திகாவை கட்டிப்பிடிச்சிருக்குறவரும் கேமராமேன் தான். சந்தோஷ சிவன். ஸோ ராதா குடும்பத்து பிள்ளைகளை கேமராமேன்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு ஒரு பொதுவான கருத்தை நாட்டு மக்கள் மத்தியில நம்பி நடமாடவிடலாம் போல இருக்கு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.