a-n-t1


 
நயன் தாரவுடன் ஜோடி சேரவேண்டுமென்று நடிகர் பல நாள் கண்ட கனவு இன்று பலித்தது.

நடிகர் ஜெட்லியின் உறவினரும், இயக்குனர் ஷங்கரின் உதவியாளருமான அட்லியின் இயக்கத்தில்

ஆர்யா, ஜெய், நயன் தாரா நடிக்கும்ராஜா ராணிபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஃபாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தரும் பணத்தில் பாதியில் மட்டுமே முழுப்படத்தை முடித்து, அவர்கள் வெறும் பார்ட்னர்கள் மட்டுமே என்று காமெடி பண்ணும் .ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தை இன்று விஸ்வரூப நாயகன் கமல் தொடங்கி வைத்தார்.

சென்னை கிரீம்ஸ் ரோட்டிலுள்ள ஒரு பங்களாவில் துவங்கிய படப்பிடிப்பில் நயனும், ஆர்யாவும் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். ஆர்யாசேட்டையை முடித்துவிட்டு, இவங்க ஆட்டையில் ஐக்கியமாவாராம்.

அட முக்கியமான சங்கதி மறந்துபோச்சே?

பூஜை முடிந்து சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக கமலும் நயன் தாராவும் மட்டும் தனியே போய் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது கமலிடம் தனக்கு அடுத்த படத்திலாவது வாய்ப்பு தரும்படி நயன் கேட்டுக்கொண்டதாகவும் ,அதற்கு கமல், ‘’ வாழ வேண்டிய வயசுப்புள்ள, ஏன் வம்பா வந்து சிம்ரன் மாதிரி என் வலையில விழுந்து வீணாப்போற?” என்று அட்வைஸ் பண்ணியதாகவும் ராஜ்கமல் வட்டாரங்களிலிருந்து தகவல்.

அடப்பாவிகளா ஒரு பத்து அடி தள்ளி நின்னு பேசினாபுள்ளியிட்ட இடங்களை இப்பிடியெல்லாமாடா ஃபில்அப் பண்ணுவீங்க?’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.