இந்தியில் எடுக்கப்பட்ட சிலுக்கின் கதையான ‘டர்ட்டி பிக்‌ஷர்’ பற்றிய செய்திகள் அலையடித்து ஓய்ந்திருந்த நிலையில், அதை மீண்டும் நயன் தாராவுடன் கோர்த்துவிட்டு கும்மி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.

டர்ட்டி பிக்‌ஷரை இந்தியில் தயாரித்த ஏக்தா கபூர், அதை மீண்டும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக பல மாதங்களாக செய்திகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன.

,இந்தியில் வித்யாபாலன் நடித்த சிலுக்கு கேரக்டரில் நயன் தாரா குலுக்கினால் நன்றாக இருக்கும் என்று ஏக்தா விரும்பியதாகவும், அதற்கு ஓ.கே.சொல்ல நயன் சம்பளமாக இரண்டரை கோடி கேட்டதாகவும், சில நல்லவர்கள் ஊதி விட்டுப்போய்விட்டார்கள்.

இந்தச்செய்திகளை படித்து துடித்துப்போன நயன் தாரா, ‘இதை எழுதினவன் மட்டும் என் கையில கிடச்சான். மவனே அவனை பர்மனெண்டா என்னோட டச்-அப் பாயா வச்சிக்கிட்டு டார்ச்சர் பண்ணிருவேன்’’ என்கிறாராம்.

‘’ ஏ யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி? சீக்கிரமா போயி சரண்டர் ஆகி,டச்-அப் பாய் வேலைல பிக்-அப் ஆகப் பாருங்கப்பா’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.