ஹிந்தியில் சௌதாகர் படத்தில் 1991ல் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மணிரத்னத்தால் பம்பாய் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட
மணிஷா கொய்ராலா நேபாள மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் ஒரு நாள் அவர் இணைந்து பணியாற்றும் சமூக சேவை அமைப்பின் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது மயங்கி விழுந்தார்.
அதையடுத்து முழு பரிசோதனைக்காக மும்பையிலுள்ள ஜஸ்லோக்
மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு புற்று நோய் இருப்பதாகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
90களில் தமிழ் மற்றும் இந்தியில் முண்ணனி நடிகையாகத் திகழ்ந்தார். எல்லா பெரிய நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார். மணீஷா நேபாளத்துக்கான முன்னாள் ஆஸ்திரேலியத் தூதர், அமெரிக்க எழுத்தாளர் க்ரிஸ்டோபர் டோரிஸ் போன்றவர்களுடன் பழகி பின் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
வாழ்வில் வெற்றிகளையே பெற்ற அவர் 2010ல் தனது 40வது வயதில் சாம்ராட் டஹல் என்பவரை மணந்தார். சமீபத்தில் அவரை விவாகரத்து செய்துள்ள மணீஷா அதன் பின் இந்தியா திரும்பினார்.
ஆரம்பத்தில் இருந்தே போதைப் பழக்கங்களுக்கு அடிமையாயிருந்த மணீஷா கொய்ராலா தனது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் பார்களில் மேலும் குடித்து, ஆடி அவர் மேல் இரக்கப்படும்படி ஆனார்.
பின்னர் மிகச் சமீபத்தில் தான் ஆன்மீகத்தை நோக்கித் திரும்பிய மணீஷா மன அமைதி வேண்டி நேபாள் மற்றும் வட இந்தியாவில் உள்ள கோவில்களுக்கும் ஆசிரமங்களுக்கும் செல்ல ஆரம்பித்திருந்தார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். ஆனாலும் என்ன குறைந்து போனார் என்கிறீர்களா ?