vishal

பொங்கல் ரிலீஸாக உடன் ஓடிவந்த ’அலெக்ஸ்பாண்டியன்’ கலெக்ஸன் சைடு படுதோல்வியைக் கவ்விக்கொண்டதால், வசூலில் ‘சமர்’ கொஞ்சம் சுமாரானதை ஒட்டி நேற்றுமாலை நாயகன் விஷால், இயக்குனர் திரு, மற்றும் மதுபானக்கடை நாயகி த்ரிஷா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

[ இதே போன்ற  ஒரு சந்திப்பை பட ரிலீஸுக்கு மறுநாள் அறிவித்துவிட்டு, அதை பின்னங்கால் பிடறியில் பட ‘அலெக்ஸ்பாண்டியர்கள் கேன்சல் பண்ணியது ஒரு தனிக்கதை]
‘சமர்’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ டைட்டில் விவகாரத்தில் தொடங்கி, படத்தின் வில்லன்கள் அளவுக்கு வேறு ஆட்களுடனும் சண்டை போட வேண்டியிருந்தது’ என்று அங்கலாய்த்த விஷால், அந்த வில்லன்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றார்.
சினிமாவில் செண்டிமெண்டுக்கு, கேமராவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடமுண்டு என்பதைப் புரிந்துகொண்டு,’ நான் தண்ணியடிக்கிற மாதிரி காட்சி வந்தாலே படம் ஹிட்டாகிரும்ங்கிறதால நான் தான் டைரக்டர் கிட்டயும், விஷால் கிட்டயும் அப்படி ஒரு சீன் வைக்கச்சொன்னேன்’ என்று குஷாலான ஒரு மேட்டரை திரிஷா கிளப்பி விட, நிருபர்கள் மத்தியில், இவர் ட்ரிங்ஸ் சாப்பிடுவாரா மாட்டாரா? என்று பாப்பையா இல்லாமலே ஒரு புட்டி மன்றம் நடந்தது.
அடுத்த படமும் இயக்குனர் திருவுடன் இணைந்து பண்ணப்போகிறேன்’ என்று விஷால் மேடையிலேயே அறிவித்ததால், அடுத்த நிமிடமே ஒரு சுற்றுப் பெருத்துக்காணப்பட்ட இயக்குனர் திருவும் விஷால் போலவே’ சமர்’ ரிலீஸாகாமல் தள்ளிப்போக சிலர் செய்த சகுனித்தனமான சதியை சூசகமாகவே பேசினார். அப்போது ஒரு நிருபர், ‘அந்த தயாரிப்பாளரை ட்விட்டரில் நீங்க கெட்ட வார்த்தையால திட்டினீங்களாமே?’ என்று கேட்டபோது, அதை மறுக்காமல், ‘அது முடிஞ்ச கதை, இப்ப வேணாமே சார்’ என்று சமாளித்தார்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.