ama

நயன் தாரா, அமலா பால்களுக்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் இயக்குனர் விஜய் தான். அதிலும் ‘தாண்டவம்’ படச்செய்திகள் மட்டுமே அவரது வாழ்க்கையில் கோரதாண்டவத்தை ஆடிவிட்டுச்சென்றது

என்றால் மிகையில்லை.
‘’என்னைப்பத்தி எக்கச்சக்கமா எழுதி சொந்தபந்தங்களா மாறிட்டீங்க. அந்த உரிமையில கேக்குறேன். 2013-ல என்னைப்பற்றிய வதந்தி, கிசுகிசு, பிட்டு மற்றும் அட்டுச் செய்திகளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடுங்க பாஸ்’ என்ற கோரிக்கையுடன் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தனது லெட்டர்பேடில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் விஜய்.
தன்னைப்பற்றியும், தனது பெயரிப்படாத நடிகர் விஜய் படம் பற்றியும் வரும் சில செய்திகள் தனக்கு மிகுந்த மனவேதனையையும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு பணவேதனையையும் தரக்கூடும் என்பதால், என்ன எழுதுவதாக இருந்தாலும் தன்னைத்தொடர்பு கொண்டு தீர விசாரித்த பிறகே எழுதும்படி அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கிறார் இயக்குனர் விஜய்.
சரிதான் பாஸ், ஆனா உங்க வழியில ஒரு பத்து இயக்குனர்கள் அப்பீல் பண்ணுனா, நம்ம சினிமா நிருபர்கள் நிர்கதியா நிக்கணுமே பாஸ்.  அப்புறம் அவிங்க புவாவுக்கு என்ன பண்ணுவாய்ங்க?

பி.கு: இந்த ஸ்டில்லைப்போட்டதுல எதுவும் உள்நோக்கம் இல்லை பாஸ். முதல்காரணம் உங்களைப்பத்தி கிசுகிசு எதுவும் வரலைன்னா அந்தப்பொண்ணு எவ்வளவு சந்தோஷப்படும்னு யோசிச்சது. ரெண்டாவது, அவசரத்துக்கு உங்க ஸ்டில் எதுவும் கிடைக்கலை அதான்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.