bhagatfazil andrea love

கடலில் ராதாவின் மகள் துளசியையும், கார்த்திக்கின் மகன் கௌதமையும் அறிமுகம் செய்த மணிரத்னம் தனது அடுத்த படமான ‘காற்று’ ஐ தொடங்கவிருக்கிறார். இதற்கு புதுமுகங்களைத் தேடியவர் தற்போது மலையாள இயக்குனர் பாசிலின்( பூவே பூச்சூடவா) மகன் பஹத் பாசிலை தமிழில் அறிமுகப்படுத்த முடிவுசெய்திருக்கிறாராம்.

பஹத் பாசில் தற்போது கேரளாவில் நம்பர் ஒன் ஹீரோக்களில் ஒருவர். மலையாளத்தில் இவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து ஹிட்டாகி ஓடியிருக்கின்றன. இவர் ஆண்ட்ரியாவுடன் ‘அன்னயும் ரசூலும்’ என்கிற மலையாளப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்போது இவர் ஆண்ட்ரியாவைத் தான் காதலிப்பதாக அறிவித்தார். ஆனால் ஆண்ட்ரியாவோ அவரை காதலிக்கவில்லை என்று மறுத்துவிட்டாலும் இவர் தொடர்ந்து ஆண்ட்ரியாவை காதலித்து வருகிறாராம்.

இதற்குப் பின் பஹத்துடன் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துவிட்டாராம் ஆண்ட்ரியா. இப்போது மணிரத்னம் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதே போன்றதொரு வாய்ப்பு வரும்போலத் தெரிகிறது. ஒருவேளை அப்படியொரு வாய்ப்பு தேடிவந்தால் ஆண்ட்ரியா என்ன செய்வார்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.