pannaiyarum-padminiyum-news

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வித்தியாசமாக கதை சொல்லி அந்த ஆச்சரியத்திலேயே படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றவர் தான் இயக்குனர் அருண்குமார். மேஜிக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்க அவருடைய இயக்கத்தில் உருவாகும் படம் தான் ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய் சேதுபதியும், அட்டகத்தி ஐஸ்வர்யாவும் நடிக்கிறார்கள்.

“சில மனிதர்களுக்கு அவர்களுடன் தொடர்புடைய ஓர் உயிரற்ற பொருள் மீது அளவு கடந்த பிரியம் ஏற்படும். அதை போற்றிப் பாதுகாப்பார்கள். அதைப் பிரிய நேரும்போது அளவுகடந்த வருத்தம் அடைவார்கள். அதுபோல எழுபதுகளில் பத்மினி கார் மிகவும் ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதப்பட்ட ஒரு கார். அதை மிகவும் பிரியமாக பாதுகாத்தவர்கள், அத்துடன் பேசுபவர்கள் என்று எல்லாமே அந்தக் காராகவே தனது வாழ்க்கை முழுதும் செலவழித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தக் களத்தைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். அதைத் தான் மைய இழையாகக் கொண்டு கதை
சொல்லியிருக்கிறேன்” என்கிறார் அருண்குமார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.