karpavai-kattrapin-movie-news

புதுமுகங்கள் மது மற்றும் அபிநிதா அறிமுகமாக, பட்டுராம் செந்தில் இயக்குனராக அறிமுகமாக அகவொளி பிலிம்ஸின் தயாரிப்பில் தயாராகும் படம் “கற்பவை கற்றபின்”. படத்தின் மூலக்கரு இந்தியாவில் பெருகி வரும் இளைஞர் தற்கொலைகள் பற்றியது.

உலகெங்கிலும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. தோல்வியால், விரக்தியால், அதிர்ச்சியால் வாழ்வின் விளிம்பில் நிற்பதாக எண்ணிக் கொண்டு மனமும், மூளையும் சேர்ந்து எடுக்கும் தவறான முடிவே தற்கொலை. இப்போதே மிக அற்பமான காரணங்களுக்காக தற்கொலைகள் செய்வது அதிகரித்து வருகிறது. அதிலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலையை உடனே முடிவாகக் கொள்வது சிறார்களிடமும், இளைஞர்களிடத்திலும் அதிகமாகியிருக்கிறது.

இப்படிப் பட்ட சமூகப் பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் ‘கற்பவை கற்றபின்’. தற்கொலை செய்துகொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்மானமாய் முன்வைத்து அலசும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் பட்டுராம். சந்தீப், தருணா உடன் நடிக்கிறார்கள். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.டி.இந்திரவர்மன் இசையமைக்கிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.