தமிழில் சமீபத்தில் நல்ல த்ரில்லர் படங்கள் வந்து நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்தன. அதன் தொடர்ச்சியாக வருகிறது ‘ஆ’. அம்புலி படத்தை இயக்கிய ஹரிசங்கர் – ஹரி நாராயணன் எனும் இரட்டை இயக்குனர்கள் இப்படத்தையும் இயக்குகிறார்கள்.
இயக்குனர்கள் படத்தைப் பற்றிக் கூறியதாவது, “கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலசரவணன், எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் ஆறு கதைகளைச் சொல்கிறோம். மூன்றுபேர இந்திய கடல்பகுதி, துபாய் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்யச் செல்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியதுதான் கதை.
துபாய் நடிகர்களும், ஜப்பான் நடிகர்களும் நடித்துள்ளனர். 15 நாட்கள் ஜப்பானில் படப்பிடிப்பு நடத்தினோம். விஸ்வரூபம் படத்திற்குப் பின் இந்தப் படத்தில் ‘ஆரோ டி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்துள்ளோம். பின்னணி இசைக்கும், திகிலூட்டும் பின்னணி ஒலிகளுக்கும் இந்தவித ஒலிப்பதிவு மெருகூட்டும் என்று கருதியதால் இதைப் பயன்படுத்தியிருக்கிறோம்”.