ramya-nambeesan-singing

நடிகை ரம்யா நம்பீசன் சினிமாவில் ஒரு ரவுண்டு தமிழ், தெலுங்கு, கன்னட உலகை கலக்கி முடித்த கையோடு அரசியலிலும் அவர் பெயர் அடிபட்டது. சமீபத்தில் வெளிவந்த பாண்டிய நாடு படத்தில் ‘பை பை.. பை’ பாடலைப் பாடி அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்போது இன்னோரு

பாடலும் பாடியிருக்கிறார்.

‘கதம் கதம்’ என்கிற படத்தில் தாஜ் நூரின் இசையில் நாம் சிறுவயது முதலே கேட்டு வரும் பாட்டி சுட்ட வடை என்கிற பாடலை உல்டா செய்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பாடலை அவர் பாடினார். ராப் ஸ்டைலிலான பாடலை தாஜ் நூரின் மகன் என்.எம்.அக்பரும் இணைந்து பாடியுள்ளார்.

பாடல்களை பாடி முடித்துவிட்டு வழக்கமாக பாடகர்கள் கிளம்பிவிடுவது தான் வழக்கம். அன்று அந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிடவே ‘இந்த பாடலின் ரா புட்டேஜ் வேண்டும், காப்பி பண்ணித் தாருங்களேன். என் கம்ப்யூட்டரில் சேவ் செய்து கேட்டுக்கொள்கிறேன்.’ என்று வேண்டி கேட்டு வாங்கிக் கொண்டு போனாராம். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.