கல்சன் மூவிஸ் தயாரிக்கும் முதல் படமான “பென்சில்” படபிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 25 பேர் கொண்ட குழு படத்தின் 2 பாடல்களை படம்பிடிக்க நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பயணிக்கின்றனர்.

கவிஞர் தாமரை வரிகளில் “கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே” மற்றும் “யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்” என்ற இரண்டு பாடல்களுக்கு ஜீவி பிரகாஷ் குமாரும், ஸ்ரீ திவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் அசைவுகளுக்கு நடனமாடவுள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஜிவி.பிரகாஷுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ பற்றி எரிந்திருப்பதாகவும், இதனால் தனது அடுத்த பட நாயகியாக திவ்யாவை ஜிவி கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே சிபாரிசு செய்வதாகவும் ‘பென்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சங்கதியை நம்ம சைந்தவி காதுலயும் போட்டுவையுங்க பென்’சிலர்களே.

Related Images: