சின்னத் திரையில் பிரபலமான ”சின்ன பாப்பா பெரிய பாப்பா ‘ போன்ற தொடர்களின் இயக்குனரான சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.

‘நகைச்சுவை கலந்த கதைகளுக்கு மினிமம் உத்தரவாதம் இருப்பதால் வி.வி.ஆர்.சினிமாஸ்க் நிறுவனத்தின் வெங்கட்ராஜ் கதையைக் கேட்ட உடனே படப்பிடிப்புக்கு செல்லுமாறு கூறி விட்டாராம்.  இவனுக்கு தண்ணில கண்டம்’ சமீபத்திய இளைஞர்களின் அன்றாட வாழ்வில்  நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து உருவாகும் படம்.

வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியை சந்திக்கும் ஒரு தொலைக் காட்சி தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன் இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையை புரட்டி போட  எத்தனிக்கிறது.அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த  நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமா என்பதையும் பற்றியது படம். துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து டப்பிங் உள்ளிட்ட  இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

நிஜமாகவே தொலைக்காட்சி தொகுப்பாளரான தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு  ஜோடியாக நடிக்கஉள்ளார் புது முகம் நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன்,  சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர் , சென்ட்ராயன்,’ நான் கடவுள்’  ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ7 (A7) என்ற ஒரு புது இசை குழு இசை அமைப்பாளர்களாக  அறிமுகமாக , கானா பாலா, யுக பாரதி மற்றும்  கண்ணன் பாடல்களை இயற்றி உள்ளனர். ஒளிப்பதிவு செய்கிறார் ஆர்.வெங்கடேசன்.

Related Images: