கடந்த மாதம் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்கு ‘பாதுகாப்பு’ இல்லத்தில் தங்கியிருக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸுவை இன்று மும்பை செஷன்ஸ் கோர்ட் விடுதலை செய்தது.

கடந்த மாதம் ஹைதராபாத் போலீஸார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடத்திய விபச்சார வேட்டையில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஸ்வேதாவை கைது செய்தது.

ஸ்வேதாவும் தனது செயலை மறைக்காமல், ‘குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்காக சிலர் கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில் அத்தொழிலில் இறங்கியதாகவும், தன்னைப்போலவே பலமுன்னணி நடிகைகளும் தொழிலில் இறங்கியுள்ளவர்கள்தான் என்றும் அவர்கள் பெயரை தன்னால் வெளியிடமுடியும் என்று அதிர்ச்சி பேட்டி அளித்தார். ஆனால் போலீஸார் ஏனோ மற்றவர்களின் பெயர்களைத்தெரிந்துகொள்ளவிரும்பாமல் ஸ்வேதாவை மட்டும் கோர்ட்டில் ஒப்படைத்து தண்டனை வாங்கித்தந்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை நம்பள்ளி செஷன்ஸ் கோர்ட்டில் ஸ்வேதாவின் அம்மா முறையிட்டதில் இன்று ஸ்வேதா பாஸு விடுதலை செய்யப்பட்டு, மும்பையிலுள்ள தனது சொந்த வீட்டுக்கு திரும்பினார்.

Related Images: