“G மைம்” ஸ்டுடியோவின்  நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை  வளரும் இளைய  தலைமுறைக்கு கொண்டு  சென்று  அதில்  வெற்றியையும் கண்டு  வருபவர்   .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்பித்து வருபவர் .

தான்  மட்டுமே  சமுதாயத்தில் மேலோங்கி  இருக்க வேண்டும் என்ற மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற ,நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக “மா ” என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் .

இந்த  நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ  வேண்டும்  என்ற உயரிய நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்றனர் .
சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தியதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு  கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது  பிரத்யேகமாக” மா “என்ற  நிகழ்ச்சி  பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டி ராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .  இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு  ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..

யாரேனும் இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள ;
“ஜி “மைம்  ஸ்டுடியோ
மைம்  கோபி -09884032100
அஜித்  – 09841236904
கோம்ஸ் -09884500004

Related Images: