அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் விதார்த், சமுத்திரக்கனி நடிக்கும் ‘காடு’ படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

படத்தின் நாயகி சமஸ்கிருதா ஓவர் பிஸியாக இருப்பார் போல, நிகழ்ச்சிக்கு வரவில்லை.  நிகழ்ச்சியின்போது ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிய பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது கொஞ்சம் அளவுக்கதிகமாகவே உளறிக்கொட்டினார்.

‘காடு’  சோழகர் தொட்டி’ நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்டதா? என்று கேட்கப்பட்டபோது, அந்த நாவல் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதன் ஒரு பக்கத்தைக்கூட இன்னும் திறந்து பார்க்கவில்லை’ என்றவர்,  கதாநாயகி தேர்வுக்காக கேரளா போயிருந்தபோது,’நிறைய பேரைப்பார்த்துவிட்டு ஒரு நாயகியைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தில்தான் போனோம். ஆனால் முதல் ஆளாக பார்த்த சமஸ்கிருதாவே கதைக்கு பொருத்தமானவராக இருந்ததால், அவரை உடனே ‘ஒர்க்-அவுட்’ செய்துவிட்டு ஊருக்குத்திரும்பினோம்’ என்றார்

அந்த ‘ஒர்க்-அவுட்’என்ற வார்த்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் கிளப்பிய சலசலப்பு அடங்க வெகுநேரமானது.

Related Images: