’கடந்த ஒரு சில தினங்களாக எனக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண  நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் நாங்கள் ரகசியமான இடத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் வெளிவந்த செய்திகளைப்  பார்த்து நானும் என் மம்மியும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம்.

எங்களப்போலவே வருண்மணியனும் மேற்படி இரண்டையும் அடைந்திருப்பார் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

எனக்கும் வருண் மணியனுக்கும் இடையில் ஒன்றும் இல்லை. எங்களுக்குள் நடந்தது நிச்சயதார்த்தம் இல்லை. இங்கே இருக்கும் புகைப்படத்தை நீங்கள் இரண்டு வகைகளாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று யாரோ எங்களுக்கு வேண்டாதவர்கள் கிராபிக்ஸ் உத்தியில் எங்களை ஒட்டவைத்து இன்பம் கண்டிருக்கிறார்கள். அல்லது விரைவில் வருண் மணியன் எனக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதற்கான ஒத்திகை ஸ்டில் இது.

கடந்த சில தினங்களாக ட்விட்டரில் இதுகுறித்து விளக்கம் சொல்லியே நான் டயர்டாகிவிட்டேன். அதனால் நேற்றிலிருந்து மறுப்பு சொல்லும் வேலையை வருணிடம் ஒப்படைத்துவிட்டேன். என் மடியில் அமர்ந்தபடி அவர்தான் பல மறுப்பு ட்விட்டுகளை டைப் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

எனக்கு திருமணம் செய்துவைத்து வீட்டுக்கு அனுப்பும் வேலைகளில் இனியும் ஈடுபடாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் நான் திருமண வயதையோ அதற்கான பக்குவத்தையோ எட்டவில்லை.

-இப்படிக்கு உங்கள் த்ரிஷா.

 

Related Images: