‘வாகை சூடவா’ படத்தில் ‘சர சர சார காத்து’ என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆன இசை அமைப்பாளர் ஜிப்ரான்,  ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் பாடல்களால் (குறிப்பாக ‘சில்லென்ற’ ) மேலும் ரசிகர்களால் விரும்பப்படும் இசையமைப்பாளராக உயர ஆரம்பித்திருக்கிறார்.

கமலஹாசனோடு தொடர்ந்து இரண்டு படங்களில் இசை அமைப்பாளராக பணி புரிந்து வருகிறார்.  ‘உத்தம வில்லன்’ படத்துக்காக பல்கேரியா(Bulgaria) நாட்டில் சிம்போனி இசை குழுவுடன் பாடல் பதிவு செய்ததிருக்கிறார். தொடர்ச்சியாக சர்வதேச பாரமௌன்ட் ஸ்டூடியோஸ்(Paramount studios) அரங்கில் புகழ் பெற்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் இசை கோர்ப்பு பணியை செய்து வந்துள்ளார்.

தெலுங்கில், இவரது இசையில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ரன் ராஜா ரன்’ படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் பிஸியாக ஆரம்பித்துள்ளார்.

இசைவாழ்வில் இப்படி டபுள் புரோமோஷன்கள் பெற்று வரும் ஜிப்ரான் கடந்த வாரம் அப்பாவாகவும் புரோமோஷன் ஆகியிருக்கிறார். ஆம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். வாழ்த்துக்கள் !!

Related Images: