தொடர்ந்து நடைபெற்றுவரும் தள்ளுமுள்ளு மற்றும் தில்லுமுல்லுகளால் தள்ளாடி, தடுமாறி, தத்தளித்து பல மாதங்களாகவே கோமா ஸ்டேஜில் நிற்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு மீண்டும் ஒரு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே,ராஜன் முன்னிலையில் இத்தேர்தல் வரும் ஜனவரி 25 ம் தேதி நடைபெற இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் முற்றிலும் செயலிழந்த நிலையில் உள்ள இந்த ஆண்டில் தமிழ்சினிமா உலகில் பெரும் சாதனையாக இதுவரை மட்டுமே 200 படங்களுக்கும் மேல் ரிலீஸாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்களிடையேயான கோஷ்டிப்பூசல், தற்போது முன்பு எப்போதையும் விட ஊதிப்பெருத்திருக்கும் நிலையில் வரும் தேர்தலிலும் சந்தி சிரிக்கப்போகும் சகல காட்சிகளையும் நாம் தரிசிக்கப்போவது உறுதி.

Related Images: