மீடியாக்களால், நம்மையும் சேர்த்து, இதுவரை சுமார் நூறுமுறை வரை நிச்சயதார்த்தங்களும், திருமணங்களும் செய்துவைக்கப்பட்ட த்ரிஷா இன்று முதல் முறையாக தன் திருவாய் திறந்து தனது நிச்சயதார்த்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

‘திரிஷா இல்லைன்னா திவ்யா’ என்று ஏற்கனவே ரசிகர்கள் மனதை திடப்படுத்தி இருந்ததால், தமிழகத்தில் எங்கும் தற்கொலை முயற்சிகள் நிகழவில்லை.

மாப்பிள்ளை கடந்த சில வாரங்களுக்கு த்ரிஷாவை தனி ஃப்ளைட்டில் நண்பிகளுடன் தள்ளிக்கொண்டு போனாரே, அதே தொழிலதிபர் வருண் மணியன் தான். இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்வதாக இருந்தால் சமீபத்தில் ரிலீஸான ‘காவியத்தலைவன்’படத்தின் தயாரிப்பாளர்.

’பெரிய தொழிலதிபர்னு சொல்றாங்க. ஆனா ரொம்ப பழைய சாமானை வாங்குறாரே?’ தன்னை விட திரி இயர்ஸ் மூத்தவரான த்ரிஷாவை மணக்கிறார்’ என்றெல்லாம் இணையதளங்களில் நூற்றுக்கணக்கில் குவியும் கமெண்ட்கள் குறித்து எந்தக்கவலையும் கொள்ளாத த்ரிஷா, இந்த நிச்சயதார்த்த அறிவிப்போடு மீடியா மக்களுக்கு மேலும் த்ரி செய்திகளையும் சொல்லியிருக்கிறார். அவையாவன;

1. ‘நண்பர்களே வரும் ஜனவரி 23 அன்று எனக்கும் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம், மிகவும் பெர்சனலான ஒன்று என்பதால் யாருக்கும் அழைப்பு இல்லை.
2. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே திருமண புரோகிதர்களாக மாறி ஆளாளுக்கு இஷ்டத்துக்கு ஒரு தேதியை எழுதி கஷ்டத்தைக் கொடுக்காதீர்கள்.
3. திருமணம் முடிந்தபிறகு சிலர் சொல்வது போல் நான் சினிமாவை விட்டு ஓடப்போவதில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பேன்’.

மூனுஷாவின் மூன்று செய்திகள் இவைதான். கிளம்புங்க.. கிளம்புங்க.. போய் புள்ளகுட்டிகளை படிக்கவைக்கிற வழியைப்பாருங்க…

Related Images: