இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’. சின்னத்திரை மற்றும் வானொலியில் தோன்றிய  மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’சங்கர், ஸ்ருதி பாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜான் விஜய் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார் மிர்ச்சி செந்தில்.

“இயக்குனர் வெங்கடேஷ் சார் என்னை முதலில் கதை சொல்ல அழைத்த போது, ஒரு பொறி கலங்கும் ஆக்ஷன் படமாக இருக்கும்.  நாமளும் பிண்ணி பெடல் எடுக்கலாம் என்று நினைத்துதான் சென்றேன். வெங்கடேஷ் சார் என்னை சந்தித்தவுடன் சொன்ன முதல் வார்த்தை, இது ஒரு காமெடி- த்ரில்லர் படம் உங்களுக்கு இது செட் ஆகும் என்று ஆரம்பித்தார்.  இப்படத்தில் நான் சென்னையில் வேலை செய்யும் ஒரு அமைதியான கிராமத்து இளைஞனாக வருகிறேன். புதுமுகம் ஸ்ருதி பாலா எனக்கு கதாநாயகியாக வருகிறார். ரொம்ப நல்லாவே நடித்திருக்கிறார். சர்வஜித் வில்லனாக நடித்திருக்கிறார்’ என்றார் செந்தில்.

“வெங்கடேஷ் சாருடன் பணிப்புரிந்தது ஒவ்வொரு நாளும் ஒரு  புது பாடமாக  இருந்தது. எல்லா நடிகரையும் சமமாக பார்க்க கூடிய மனிதர்.  சினிமாவை நன்கு அறிந்தவர்.  இப்படம் அவரது முந்தைய படங்களிலிருந்து மிக வித்தியாசமாய் இருக்கும்.  படத்துக்கு ‘ யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.   இது குடும்பத்துடன் ரசிக்கும்படியான நல்ல படம்.  எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த ராண்டேவோ மூவி மேக்கஸ் மற்றும் வெங்கடேஷ் சார் ரெண்டு பேரும் ‘ரொம்ப நல்லவங்க சார்’” என்று  நகைச்சுவையோடு கூறினார் மிர்ச்சி செந்தில்.

Related Images: