உலகநாயகன் கமல் பிறப்பால் அய்யராகவே இருந்தபோதிலும் திராவிட கருத்துக்களின் மேல் நிறைய ஈடுபாடு கொண்டவர். நாத்திகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதே நேரம் மதங்களின் மீது ஓரளவு மதிப்பும் உள்ளவர் (அவ்வப்போது அவரது இயல்பான ஹிந்துத்துவா முகம் எட்டிப் பார்த்தாலும்). சமீபத்தில் அவரை பேட்டிகண்ட ஐபிஎன் லைவ் சேனலில் அவர் தைரியமாகவும், தெளிவாகவும் மாட்டுக்கறி பற்றிய பா.ஜக அரசின் கருத்துக்களை விமர்சித்து தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

அந்தப் பேட்டியின்போது, மகாராஷ்ட்டிராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்,
“ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.
மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்கவேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்லுவதையும் கண்டிப்பாகத் தடுக்கவேண்டுமே.  சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்லுவதையும் கூட தடுக்கவேண்டும்.
வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது” என்றார்.

இது வரவிருக்கும் அவரது இந்துத்துவா டைப் படம் விஸ்வரூபம் – 2 வுக்கான முன்னோட்டம் என்ற சந்தேகம் எழுந்தாலும், நீங்க சொன்னது நெத்தியடி உத்தம வில்லன் சார் !! இந்த விஷயத்தில் நீங்க உத்தம ஹீரோவாகவே ஆகிட்டீங்க..  வேறு எந்த பிரபலத்துக்காவது இருக்கிறதா இந்த துணிச்சல் ?

Related Images: