நடிகை லட்சுமி ராய் இப்போது மீண்டும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை என தொடர் ஹிட் படங்களால் அவரது மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

லட்சுமி ராய் ஒரு சாகசப் பிரியை. சில மாதங்களுக்கு முன்பு பாராசூட்டில் பறந்தபடியே போட்டோ எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.  இதுபோல நிறைய சாகசங்களை செய்வது என்று குறித்து வைத்திருக்கிறாராம்.

தற்போது சவுகார் பேட்டை என்ற திகில் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்து வருகிறார்.  இப்படத்திற்காக தாய்லாந்து சென்றுள்ள லட்சுமி ராய், அங்கு ஒரு புலிகள் சரணலாயத்திற்கு சென்றார். அங்கு புலிக்குட்டி ஒன்றை தன் மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய அவர் அதற்கு புட்டிப்பால் கொடுத்தார்.  இந்தப் போட்டோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“எனது சாகசங்களின் பட்டியலில், புலிக்குட்டியுடன் விளையாடவேண்டும் என்பதும் ஒன்று. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. இந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அது சரி..பக்கத்தில் தாய்ப்புலி ‘தேமே’ என்று ஏன் நிற்கிறது ?

Related Images: