யூடியுபில் சக்கை போடு போட்ட தனது  ‘வாயா ஏன் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் காஞ்சனா-2 படத்தில்   இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் லியோன் ஜேம்ஸ்.  கீபோர்டு வாசிப்பாளரான இவர் ஆர்.எஸ். இன்ஃபொடெயின்மென்ட் நிறுவனத்தின்  ‘கோ-2’ படத்தில் இசையமைப்பாளராக தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

“எனது சிறு வயதிலிருந்து பியானோ கற்று வருகிறேன். பள்ளிக் காலம் முதல் இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் ‘ஜின்க்ஸ்’ மற்றும் ‘பாஸ்-இன்-ப்ரிட்ஜ், க்ரூவ்3, ப்ராஜெக்ட் யூஜ் எனப் பல இசைக் குழுக்களில் சேர்ந்து வாசித்து வருகிறேன். ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு சிறு வயதிலேயே பாட்டு பாடியது எனது பாக்கியம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் அவர்களுக்கு கீபோர்டு வாசித்து வந்தேன். “ எனக் கூறினார் இந்த இளம் இசையமைப்பாளர் .

“ரசிகர்கள் மத்தியில் ‘வாயா என் வீரா’ மற்றும் ‘சண்டிமுனி’ பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை தமிழ் திரை இசையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. காஞ்சனா-2 படத்தின் வெற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கையளிதுள்ளது. இப்போது பாபி சிம்ஹா நடிப்பில்  ‘கோ 2’ படத்திற்கு இசையமைத்துள்ளேன்.”

யூத்தான நீங்களும் ‘கொலவெறி’யாகி நடிக்க வந்துடாதீங்க பாஸ் !!

Related Images: