கௌதம்மின் ‘அச்சம் என்பது மடமையடா’ தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.  தமிழில் சிம்புவும் தெலுங்கில் நாகா சைதன்யாவும் ஹீரோக்கள்.

தமிழில் 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாயகி பல்லவி சுபாஷ்ஷை தூக்கிவிட்டு இப்போது மஞ்சிமா மோகனை நாயகியாக்கியிருக்கிறார் கௌதம். மஞ்சிமா ‘ஒரு வடக்கன் ஸெல்பி’ என்கிற ஹிட்டான மலையாளப்படத்தின் நாயகி.

தெலுங்கு அ.எ.ம வின் ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். பல்லவியின் காட்சிகளை மஞ்சிமாவை வைத்து இப்போது ரீஷூட் செய்கிறார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றனவாம்.

Related Images: