வரிவிலக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக சூர்யா நடிப்பில் இன்று ரிலீஸாகும்  ‘மாஸ்’ பட டைட்டில் ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று மாற்றியிருக்கிறார்கள். என்னே நேக்கான தமிழ்ப் பற்று !!

வெங்கட் பிரபு இயக்கும் மாஸ்ஸில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஒரு வேடம் சமூகத்தில் ரொம்ப புகழ்பெற்ற நபர். இன்னொரு நபர் ஈழத்தமிழனாம். படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் சொன்ன தகவல் இது.

ஈழத்தமிழனை ஊறுகாயாகத் தான் தமிழ்ச் சினிமா உலகம் இதுவரை தொட்டுக் கொண்டிருக்கிறது. தெனாலியில் கமலும், கடலில் மணிரத்னமும், நீர்ப்பறவையில் சீனுராமசாமியும் ஈழத்தமிழர்களை வறுத்தெடுத்த கதை நமக்குத் தெரியும்.

வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களில் அவரது சமூகப் பார்வையும் நமக்குத் தெரியும். இதில் ஈழத்தமிழனை என்ன செய்ய காத்திருக்கிறாரோ ?

Related Images: