லேட்டஸ்ட்டாக பேஸ்புக்கில் ஆளாளுக்கு சரத்குமாரை முந்திரி பருப்பு போல வறுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம்? சரத்குமார் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தில் கையில் ஒரு கோப்பை ஒயின் வைத்திருப்பது போல் ஒரு படத்தை வைத்திருக்கிறார்!

இதெல்லாம் ஒரு நடிகராக இருக்கும்போது மட்டும் அவர் செய்திருந்தால் பரவாயில்லை. யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. சொல்லப் போனால் பழைய மிஸ்டர் மெட்ராஸூக்கு இன்னும் நூறு லைக்குகள் கூட விழுந்திருக்கக்கூடும்.

ஆனால் இப்போது அவர் பொறுப்புள்ள அரசியல் தலைவராக அம்மாவின் ஆணைகளை வெளியிலிருந்து நிறைவேற்றும் தொண்டராக இருப்பவர். அவர் இப்படிச் செய்துவிட்டாரோ என்று அவரிடம் ”ஏன்ங்க ஒரு பொறுப்பான கட்சித் தலீவர் நீங்க இப்படியெல்லாம் பண்ணலாமா.. டாஸ்மாக்குக்கு ப்ரீ விளம்பரம் தரலாமா” என்கிற ரேஞ்சில் கமெண்ட்டுகள் குவிகின்றன.

இதையெல்லாம் கவனித்த அவர் உடனே பேஸ்புக் படத்தை மாற்றிவிட்டார் போலத் தெரிகிறது. ஆனாலும் பேஸ்புக் விஷமிகள் அவரை இன்னும் கொஞ்ச நாளைக்கு வெரைட்டி வெரைட்டியாக வறுத்தெடுத்துவிட்டுத் தான் ஓய்வார்கள் போல.

Related Images: