சண்டிகாரைச் சேர்ந்த ஷிகா மோங்கா என்கிற இளம்பெண் கோக் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் காரணம் யார் தெரியுமா ? ரித்திக் ரோஷன்.

கடந்த 2000ம் வருடம் மே மாதத்தில், ஷிகா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கோக் ஒரு பரிசுப் போட்டியை அறிவித்திருந்தது. அதில் முதல் பரிசு பெற்றார் மோஷி. முதல் பரிசு என்ன தெரியுமா ? ரித்திக் ரோஷனுடன் ஒரு ரொமான்டிக் டின்னர்.

உடனே சண்டிகாரிலுள்ள கோக் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்றார் ஷிகா. அவர்களோ ரித்திக் ரேஷனுடன் டின்னர் சாப்பிட ஏற்பாடு செய்ய இயலாது என்றும் அதற்குப் பதிலாக 5 லட்ச ரூபாய் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

லட்டர்கள் மேல் லட்டர்கள் போட்டும், போய்ப் பார்த்தும் ரித்திக் ரோஷனை பார்க்க அவர்கள் ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டதால் 2003ல் அவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு பதிலளிக்க இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது நீதிமன்றம் கோக் நிர்வாகத்திற்கு ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டிருக்கிறதாம்.

அவர்கள் பதிலளித்தார்களா ?இல்லையா ? என்பது இன்னும் தெரியவில்லை.

Related Images: