சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டுக்கு அகதியாகச் சென்றார். அப்போது படகு கவிழ்ந்து அப்துல்லாவின் மனைவி ரேஹன், குழந்தைகள் காலீப், அய்லான் ஆகியோர் உயிரிழந்தனர்.
இறந்த 3 வயதுக் குழந்தையான அய்லானின் உடல் துருக்கியின் கோஸ் தீவின் போட்ரம் கடற்கரையில் ஒதுங்கியது. கடற்கரை மணலில் கவிழ்ந்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப்படம் உலகத்தையே கணக்க வைத்தது. அந்த ஒரு புகைப் படத்தால் பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் அளித்தன.
இந்நிலையில் மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாத் கடற்கரையில் அய்லானுக்கு நேற்று முன்தினம் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தை அணிந்திருந்தது போலவே சிவப்பு நிற டி-சர்ட் அணிந்து சுமார் 100 பேர் கடற்கரை மணலில் உயிரற்ற சடலம் போன்று தலைகுப்புற படுத்திருந்தபடியே அவனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலஸ்தீனத்தின் மேற்குகரை கடற்கரையில் சிறுவன் படுத்திருந்ததுபோலவே மணல் சிற்பம் கடற்கரை மணலில் மணலால் உருவாக்க்ப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Images: