நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கவுண்டமணி நடித்த ’49 ஓ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், கவுண்டமணி தற்போது நடித்து வரும் அடுத்த திரைப்படமான ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்நிலையில் கவுண்டமணிக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், ஆனால் அவர் அதிக படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

அதிலும் இனிமேல் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், அவ்வாறு காமெடி செய்ய வேண்டும் என முடிவு செய்தால் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே காமெடி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கவுண்டமணி அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Images: