உலகின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘இண்டெல் செக்யூரிட்டி’ நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ‘மோஸ்ட் சென்சேஷனல் செலிபிரிட்டி’ என்ற சர்வேயை எடுத்து வருகிறது.

கோலிவுட் செலிபிரட்டிகளின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் சைபர் க்ரைம் கிரிமினல்கள் குறித்த சர்வேயை எடுத்து வரும் இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு எடுத்த சர்வேயில் நடிகர் தனுஷ் டாப் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த வருடம் அந்த பட்டியலில் இருந்து தனுஷ் வெளியேறியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் அமலாபால் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் நான்கு இடத்தில் ஆர்யா, சூர்யா, விஜய், எமிஜாக்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது இடத்தில் தனுஷிற்கு பதிலாக அமலாபால் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட செலிபிரட்டிகளின் புகைப்படங்களை சைபர் க்ரைம் கிரிமினல்கள் அதிகளவு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Images: