அக்டோபர் 9ஆம் தேதி உள்ள ‘மசாலா படம் ‘ படத்தில் பாபி சிம்மா, மிர்ச்சி சிவா, கௌரவ் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியோர் நடித்து உள்ளனர். ஆல் இன் pictures சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் மசாலா படம் , படத்தை வெளி இடுபவர்கள் Auraa சினிமாஸ்.

சமூக வலைதளங்களில் சினிமா விமரிசனம் என்ற புதிய தலைப்பை ஆதாரமாக கொண்டு படமாக்க பட்டு உள்ள ‘மசால் படம் ‘ மூலம் லக்ஷ்மி தேவி அறிமுகமாகிறார். பத்திரிகையாளர், எழுத்தாளர் , திரை கதை அமைப்பாளர் என பன் முகம் கொண்ட லக்ஷ்மி தேவி இந்தப் படத்தில் மூன்றுக் கதா பாத்திரங்கள் சுழலும் மைய புள்ளியாக நடித்து உள்ளார்.

‘நான் என்னுடைய பயணத்தை ஒரு மாடலாக தான் துவங்கினேன்.மசாலா படம் என்னை நடிகையாக அறிமுகம் செய்தது. சகல மசாலாக்களும் நிறைந்த மசாலா படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என சொல்லலாம்.மிர்ச்சி சிவாவின் body language மற்றும் dialogue டெலிவரி மிகவும் பிடிக்கும் .சீரியசாக பேசி மற்றவரை சிரிக்க வைக்கும் பாங்கு , அவருக்கே உரியது.அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அங்கு சிரிப்பு உத்திரவாதம்.மிகவும் புத்திசாலிக் கூட.

பாபி சிம்மா எந்நேரமும் தனது கதாபாத்திரத்தை பற்றி தான் சிந்திப்பார். இந்தப் படத்தில் அவர் மிகவும் கோவக் காரராக நடிப்பதால் என்னவோ , படப்பிடிப்பிலும் அப்பிடியே இருப்பார். மசாலா படம் அவருடைய திரை உலக பயணத்தில் மிக பெரிய மைல் கல் ஆக இருக்கும். கௌரவ் தன்னுடைய தொழில் மிக கவனத்துடன் இருப்பவர், அந்த கவனமே அவரை இன்னமும் உயர்த்தும்.படப்பிடிப்பில் நாங்கள் ஒருமித்து கலந்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்ச பார்ப்போம் . இயக்குனர் லக்ஷ்மன் எடுத்துக் கொண்ட இந்த புதிய கதை களம் நிச்சயம் வெற்றி பெரும் .சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனம் செய்வோரை பற்றிய படம் என்பதால் ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் பார்த்து எத்தனை பேர் லைக் பண்ண போறாங்க , எத்தனை பேர் கமெண்ட் பண்ண போறாங்க’ என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்’ என்று தன பளிச்சிடும் புன்னகையோடுக் கூறினார் லக்ஷ்மி தேவி.

Related Images: